எழுதுமட்டுவாழில் கஞ்சா மீட்பு – தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

எழுதுமட்டுவாழில் கஞ்சா பொதி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேடப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சட்டத்தரணிகள் மூலம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 9 ஆம் திகதி அரச புலனாய்வு பிரிவினர்... Read more »

பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

பேருந்து பயண கட்டணம் இன்று முதல் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதற்கமைய 34 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாவாக குறைவடைந்துள்ளது. Read more »

வடக்கில் பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டியில் மோதல்: மாணவி உட்பட ஐவர் படுகாயம்!

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.... Read more »

வெடுக்குநாறி மலை சிவன் ஆலயம் அழிப்பு! : ஜனாதிபதியிடம் மாவை விடுத்துள்ள வேண்டுகோள்

”சைவ மக்களுடைய உரிமையை இந்த அரசாங்கம் பாதுக்காக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

குடத்தனை கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. குறித்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலால் என நம்பப்படுகிறது. எனினும் குறித்ய சிவலிங்கத்தை அதே... Read more »

ஆளுநரின் பணிப்புரையில் மீண்டும் அதே இடத்தில் நாவலரின் திரு உருவப்படம்..!

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பணிப்புரைக்கு அமைய நாவலர் மண்டபத்தில் கழற்றப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவப்படம் மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை  பொருத்தப்பட்டது. யாழ். நல்லூரில் அமைந்துள்ள நாவலர் மணிமண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த நாவலர் பெருமானின் திருவுருவப்படம் சில வாரங்களுக்கு முன்னர் கழற்றப்பட்டு ஒரு... Read more »

18 கிலோ கஞ்சாவுடன் 24 வயது இளைஞன் ஒருவர் கைது…!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் வீதியில் வைத்து 18 கிலோ கஞ்சாவுடன் 24 வயது இளைஞன் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் காரில் கஞ்சாவினை எடுத்துச் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்... Read more »

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் அபாயகரமானது ; மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிப்போம் -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் மிகவும் அபாயகரமான உள்ள நிலையில் மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிக்க வேண்டும்  என ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள  காட்சி அலுவலகத்தில்... Read more »

காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனது – அமைச்சர் டக்ளஸ்

காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனதும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆனால் உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இணுவில் மத்திய கல்லூரியில் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து... Read more »

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். கலாச்சார மத்திய நிலையத்தில் கலை நிகழ்கள்!

இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் ( ICCR) தலைவர் முனைவர் வினய் சஹஷ்ரபுத்தே  அவர்களின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு விசேட கலை நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இக் கலை நிகழ்கள்... Read more »