ஐக்கிய மக்கள் சக்தியினரால் தீப்பந்த போராட்டம்!

தீப்பந்த போராட்டம் ஒன்று  நேற்றையதினம்  முன்னெடுக்கப்பட்டது. நேற்று  மாலை 6.30 மணியளவில் கொல்லங்கலட்டி பகுதியில் இருந்து கீரிமலை சிவன்கோவில் வரை இந்த தீப்பந்த போராட்ட பேரணி இடம்பெற்றது. மின்சார விலை அதிகரிப்புக்கு எதிராகவும், எரிபொருள் அதிகரிப்புக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்... Read more »

இலங்கை அதிபர் சேவை III இற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு – 2023*

மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 401 நியமனதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2023.11.04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளமையினால் நியமனம் செய்யப்படவுள்ள நியமனதாரிகள்... Read more »

தாயகத்தை கண்காணிக்க தூதுக்குழு வருகையா? – சட்டத்தரணி சுகாஷ் கேள்வி

யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்... Read more »

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களது 16ம் ஆண்டு நினைவேந்தல் 02/11/2023  மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »

கரையே கரையே நெருங்காதே…” விக்கியின் முதல் பாடல் வெளியானது…!(video)

“கரையே கரையே நெருங்காதே…” விக்கியின் முதல் பாடல் வெளியானது இலங்கையின் தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவ இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள  பரமேஷ்வரன் விக்னேஷ்வரன், இசைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். விக்னேஷ்வரன் உருவாக்கிய முதலாவது பாடலின் வரிவடிவ காணொளி (lyric video) யூடியூப் தளத்தில் வெளியாாகியுள்ளது. “கரையே... Read more »

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி துப்புரவு பணி ஆரம்பம்..!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். Read more »

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வருகை..!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின்... Read more »

கோவிலுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி!

கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கோப்பாய் பகுதியில் விரத வழிபாட்டுக்கு கோவிலுக்கு செல்லும் பெண்களை... Read more »

படுகொலை செய்யப்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் 15ம் ஆண்டு நினைவேந்தல்…!

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 அன்று சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம்... Read more »

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்தப்படும் வீதி திட்டத்தை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 6 மணிமுதல் முற்பகல் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.... Read more »