வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்தப்படும் வீதி திட்டத்தை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காலை 6 மணிமுதல் முற்பகல் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.
குறித்த சந்தர்ப்பங்களில் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் விசேட ஒழுங்கையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews