வயோதிபப் பெண் படுகொலை! – 25,000 ரூபாய் பணம் கொள்ளை

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்துவிட்டு, சுமார் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு... Read more »

கொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி –

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு சொத்துரிமையாளர்களிடம் கொழும்பு நகராட்சி ஆணையாளர் சட்டத்தரணி திருமதி ரோஸனி திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். சொத்துக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு சொத்துக்களை நகர சபையில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்... Read more »

சுதந்திரக் கட்சியினர் பண்டாரநாயக்கவின் பெயரை விற்று பிழைப்பு நடத்தினர் – சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் பெயரை விற்று பிழைப்பு நடத்தியதை மாத்திரமே செய்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர்... Read more »

நாட்டின் அடுத்த தலைவர் கோமாளியாக இருக்கக் கூடாது – வஜிர அபேவர்தன

நாட்டின் அடுத்த தலைவர் கோமாளியாக இருக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். சீரழிந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் உடைய தலைவர் ஒருவரே தேவை என தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டை... Read more »

கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபன் மரணமடைந்த  நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.... Read more »

வவுனியாவில் ஒரே நாளில் அறுவர் கொரோனாவால் பலி!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 6 பேர்... Read more »

இளையோர்களே தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்! – விக்கி தெரிவிப்பு

“இளையோர்கள் எமது நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களிடம் எமது மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றார்கள். உங்கள் செயற்பாடுகளை நிறுவன மயப்படுத்தி அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி எமது விடிவுக்காக நீங்கள் நிறையவே சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.” இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »

வெள்ளைப்பூடு விவகாரம்: வர்த்தகர் ஒருவர் கைது!

லங்கா சதொச நிறுவனத்துக்குரிய 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூடு அடங்கிய 2 கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதி உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஹேசாந்த டீ மெல்... Read more »

இலங்கையில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபின் பிறழ்வுகளுக்கு பெயர் சூட்டப்பட்டது.

இலங்கையில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தமது ட்விட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 701- S என்ற... Read more »

தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பைசர் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பல்வேறு குறைபாடுகளையுடைய சிறுவர்களுக்கு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதன் பின்னர் ஏதாவது பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படின், கொழும்பு ரிட்ஜ்வே பெண்கள் மற்றும் சிறுவர் வைத்தியசாலைக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 070 270 3954 என்ற தொலைபேசி இலக்கம்... Read more »