கொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி –

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு சொத்துரிமையாளர்களிடம் கொழும்பு நகராட்சி ஆணையாளர் சட்டத்தரணி திருமதி ரோஸனி திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

சொத்துக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு சொத்துக்களை நகர சபையில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு நகராட்சிப் பிரிவுக்குட்பட்ட இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துக்களை கொழும்பு மாநகர சபையின் www.colombo.mc.gov.lk எனும் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews