இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (02) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 159 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. நேற்று (01) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை,... Read more »
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர்குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் நின்றிருந்த குறித்தநபர்கள் வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன் வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் பெண்... Read more »
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு சிறுவர் தினத்தையொட்டி பளை இளைஞர் அணியினரும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தினரும் இணைந்து குறித்த மாணவர்களுக்கு தென்னம் பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டது. பளை பிரதேசத்தில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில் கடந்த (02) திகதி சந்தேக நபர்கள் சிலரால் புதையல் தோண்டப்படுவதாக பளை பொலிசாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிசார் புதையல் தோண்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.குறித்த இடத்தில் தோண்டப்பட்ட குழி... Read more »
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தாயொருவர் தீயிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, தாயை காப்பாற்ற சென்ற மகனுக்கும் தீப்பற்றிய நிலையில் தாயும், மகனும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலைக்கு... Read more »
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான செயற்குழுவின் 5வது கூட்டம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற... Read more »
38 ஆண்கள், 17 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 38 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 55 மரணங்கள் நேற்று (01) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »
இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும்... Read more »
யாழ்.மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து சக்திவாய்ந்த வெடிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த காணியின் உரிமையாளர் நேற்று மதியம் 1.30 மணியளவில் காணியை சுத்தம் செய்தவேளை குறித்த வெடிபொருள் அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வெடிபொருளை மீட்பதற்கான... Read more »
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படுவதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளையதினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »