புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பளை பொலிசாரிடம் முறைப்பாடு!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில் கடந்த (02) திகதி சந்தேக நபர்கள் சிலரால் புதையல் தோண்டப்படுவதாக பளை பொலிசாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிசார் புதையல் தோண்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.குறித்த இடத்தில் தோண்டப்பட்ட குழி ஒன்றும் காணப்பட்டுள்ளது. இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews