பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!

அரசாங்கம் இன்று (05) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அதே வேளையில் 113 ஆசனங்களின் தனிப்பெரும்பான்மையையும் இழக்க நேரிடலாம் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற... Read more »

சொந்த நலனை விட்டு பொதுமக்களின் விருப்பத்துக்கு தலைவணங்குங்கள்! – ஜனாதிபதியிடம் கோரும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல்!

இலங்கையின் ஜனாதிபதியும் தற்போதைய நிர்வாகமும் மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்கவேண்டும் என்று இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் அழைப்பு விடுத்துள்ளது. அவசரகாலச் சட்டங்கள், ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகத் தடைகள் ஆகியவற்றின் மூலம் குடிமக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டப்பூர்வமான ஒன்றுகூடல் ஆகியவற்றை முடக்குவதற்கு ஜனாதிபதி... Read more »

கோட்டாபயவை வீட்டுக்கு அழைக்கும் ஸ்பைடர் மேன்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். நாடு முழுவதும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள... Read more »

குடும்பத்துடன் ஹெலிகொப்டர் மூலம் சென்ற அரசியல்வாதி…!

கேகாலை நிதஹாஸ் மாவத்தையில் இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கேகாலை சுதந்திர மாவத்தையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடிக்கொண்டிருந்த போது தனியார் விமான சேவைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கேகாலை மாநகர சபை மைதானத்தில் தரையிறங்கியுள்ளது. கேகாலையைச் சேர்ந்த... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வீட்டின் மீது தாக்குதல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுன்னக்கட்டுள்ளன. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரி வீடுகளும் முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில்... Read more »

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு.

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

பிரதமர் மஹிந்தவையும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்! அலரி மாளிகையில் பாதுகாப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவவையும் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கொழும்பின் அலரி மாளிகைக்கு வெளியே ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து யாரும் உள்ளே செல்வதைத் தவிர்ப்பதற்காக, சிறப்புப்... Read more »

கோட்டாபயவை ஆதரித்தமைக்கு மன்னியுங்கள்! – திஸ்ஸ ஜனநாயக்க.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தமைக்காக முன்னணி ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க மன்னிப்புக் கோரியுள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இந்த நாட்டின் குடிமக்களிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். இந்த அரசாங்கத்தை ஆதரித்தமைக்காக நான் ஏமாற்றப்பட்டுள்ளேன. ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற... Read more »

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் இவ் விபத்து சம்பவம் நேற்று (4) இடம்பெற்றுள்ளது. இந்த... Read more »

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான குடி நீர் விநியோகத்தில் சிக்கல்…!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மக்களின் நாளாந்த தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது என... Read more »