கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான குடி நீர் விநியோகத்தில் சிக்கல்…!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மக்களின் நாளாந்த தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையின் காரணமாக பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews