வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு!

நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அத்தோடு மேலும் இரண்டு பெண்களும் மின்னல் தாக்கி கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை சம்பவித்துள்ளது. மின்னல் தாக்கத்துக்குள்ளானவர்கள், 1990 என்ற அவசர... Read more »

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யூரியா உரம் இறக்குமதி!

உலக வங்கியின் உதவியுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரண்டாவது கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இரவு 8 மணி முதல்... Read more »

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்று(14) இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் இரண்டு நாட்களும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்... Read more »

மட்டு நகரில் வீடு உடைத்து திருடியவர், திருடப்பட்ட பொருட்களைவிற்று கொடுத்த தரகரும் கைது…!

மட்டக்களபபு நகர்பகுதில் பூட்டிய வீடு ஒன்றை உடைத்து தொலைக்காட்சி பெட்டி, காஸ் சிலிண்டர், பூபர் செற் மற்றும் 27 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச்சென்ற முன்னாள் பிரேத பெட்டி விற்பனை கடை ஒன்றின் உரிமையாளர்,  மற்றும் திருட்டு பொருளை வாங்கி கொடுத்த புரோக்கர் ஆகிய... Read more »

பேராதனை பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம் நாளை (14ஆம் திகதி) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என பேராதனைப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நேற்று (12ஆம் திகதி) இடம்பெற்ற விசேட... Read more »

சட்டவிரோத புலம்பெயர்வு, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் தம்மை விடுவிக்க கோரிக்கை…!

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாங்கள் இந்திய தேசிய புலனாய்வு குழுவின் விசாரணையில் தாங்கள் ஆட்கடத்தல்... Read more »

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் நேற்று 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சாரதிக்கு... Read more »

முட்டைக்கு தட்டுப்பாடு, வெதுப்பகங்கள், உணவகங்கள் மூடப்படும் அபாயம்.

முட்டை தட்டுப்பாட்டால் எதிர்வரும் மூன்று நாட்களில் நாட்டிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளை மூடக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை... Read more »

15 வயது சிறுமி துஸ்பிரயோகம். இளைஞர் கைது. சிறுமி நன்னடத்தை பிரிவில்….!

தொலைபேசி மூலம் பேசி 21 வயது இளைஞனை காதலித்துவந்த 15 வயது சிறுமி ஒருவர் நள்ளிரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் காதலனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காதலன்... Read more »

அடுத்த வருடத்தில் குறையவுள்ள அரச ஊழியர்களின் ஊதியம்.

அரசாங்க ஊழியர்களின் சம்பள பணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முக்கிய அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 420 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், அடுத்த வருடம் அது 380 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற... Read more »