மாவீரர்களுக்கு வல்வெட்டித்துறை கடலில் அஞ்சலி…..!

மாவீர்நாளான நேற்று இரவு வல்வெட்டித்துறை ரேவடி கடலில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முதல் கடல் தற் கொடையாளி மேஜர் காந்தரூபன் அவர்களது தந்தையார் முருகுப்பிள்ளை யோகராசா சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்... Read more »

க.பொ.த சாதாரண பரீட்சையில் யாழ் வலயம் சாதனை!

2021 ஆம் ஆண்டுக்கு க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகின. இதன் அடிப்படையில் 193 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று யாழ் கல்வி வலயம், வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. தீவக கல்வி வலயம் 1 , கிளிநொச்சி கல்வி வலயம் 49,... Read more »

தொடருந்து மோதியதில் குடும்ப பெண்ணொருவர் பலி!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – பூம்புகார் பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (47வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்பொழுது திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான... Read more »

யாழில் திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை இன்று (28.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழைய முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார்... Read more »

இன்று மற்றும் நாளை இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இன்று மற்றும் நாளை நாடளாவிய ரீதியில் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஏ,பி,சி,டி,இ,எஃப், ஜி,எச், ஐ,ஜே, கே, எல், பி, கியு, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யு ஆகிய பிரிவுகளுக்கு... Read more »

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பால் மா துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக குற்றச்சாட்டு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 04 இலட்சம் கிலோகிராம் பால் மா விடுவிக்கப்படாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அவற்றில் ஒரு இலட்சம் கிலோகிராம் பால்மா காலாவதியாகும் திகதியை அண்மித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய... Read more »

ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகள் வழங்க திட்டம்! வெளியான தகவல்

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாது ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு... Read more »

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

தமது கற்றல் கால எல்லையை கடந்துள்ள 05 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது சட்டவிரோத செயல் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும்... Read more »

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்…!

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் பல நூற்றுக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் அஞ்சலி. Read more »

சிறுவனின் போனை பறித்த பொலிஸ், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி…!

வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. குறித்த நிகழ்வினை காணொளி பதிவாக்கிய சிறுவனின் கையடக்கத் தொலைபேசியினை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பறித்தனர் பறித்ததைக் கண்ட   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பொலிஸ்... Read more »