யாழில் வீதியை புனரமைக்குமாறு கோரி மக்கள் வீதி மறியல் போராட்டம்

யாழ். காரைநகருக்கு பேருந்துகள் பயணம் செய்யும் பிரதான வீதிகளை புனரமைக்குமாறு கோரி மக்கள் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று (29.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 786 மற்றும் 782 பேருந்து வழித்தட வீதிகளை புனரமைக்குமாறு கோரி மக்கள் இன்றையதினம்... Read more »

சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் இராணவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இது மீட்கப்பட்டுள்ளது.   இதன்போது காட்டுப் பகுதியில்... Read more »

காலிமுகத்திடல் பகுதியிலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (28.11.2022) மாலை மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 27ஆம் திகதி தங்கியிருந்து சிகிச்சை... Read more »

இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கும் சீனா

இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்நோக்கி வரும் கடன் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து பூரண புரிதல் உண்டு என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சு ஊடகப் பேச்சாளர் ஸாவோ லிஜியான்... Read more »

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஓய்வூதிய திட்டம்

இலங்கையில் புதிய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி கடற்தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை... Read more »

வடக்கில் இன்று இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு – ஸ்தம்பிக்கப்போகும் போக்குவரத்து

இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (29) வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ். சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்... Read more »

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற்றின் விலையை 175 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 450 கிராம் உள்ளூர் பால்... Read more »

மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்!

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை  நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, அம்பிட்டிய,... Read more »

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை மடக்கிப் பிடித்த சிறிலங்கா கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்த இருபத்துமூன்று இந்திய கடறடறொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த இருபத்துமூன்று இந்திய கடற்றொழிலாளர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக... Read more »

மதுபோதையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் கார் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் காவல்துறை உத்தியோகத்தர்கள் எனக் கூறி இருவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அவ்வேளை அவ்வூர் மக்களினால் அவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு தற்பொழுது யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறித்த பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த... Read more »