அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை மடக்கிப் பிடித்த சிறிலங்கா கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்த இருபத்துமூன்று இந்திய கடறடறொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த இருபத்துமூன்று இந்திய கடற்றொழிலாளர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறிலங்கா கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை செவ்வாய்கிழமை  ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews