தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், நான்கு நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியும் எனவும் அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அதேவேளை,... Read more »

ஜூன் மாதம் முதல் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!

நாட்டில், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படவுள்ளன. பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என்பன இதன் கீழ் தடை செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் பிளாஸ்ரிக் பொலித்தீன், பானம்... Read more »

இம்முறை சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை நடாத்த யாழ் மாநகர சபை நிபந்தனை!

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடாத்த... Read more »

நிதி வழங்கினால் 20 அல்லது 25 ஆம் திகதிகளுக்குள் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான பணிகளையும் நிறைவு செய்ய முடியும்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான முழு தொகையையும் கோரவில்லை, முற்பணத்தை மாத்திரமே கோருகிறோம். நிதியமைச்சு வெளியிடும் சுற்றறிக்கை, நிறுவன நிர்வாககோவை ஆகியவற்றுக்கு அமையவே செயற்பட முடியும். நிதி வழங்கினால் 20 அல்லது 25 நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய முடியும் என... Read more »

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு.

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும்... Read more »

12 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை – சுகாதார அமைச்சு

நாடளாவிய ரீதியில் இம்மாதம் மூவாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும்... Read more »

இலங்கையில் தொடரும் மின்வெட்டு! வெளியான அறிவிப்பு

மின்வெட்டை இடை நிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு தொடரும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார். மின்வெட்டு இடைநிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பினருக்கும் அறிவிக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.... Read more »

இலங்கை கடற்பரப்பில் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவருக்கு வாள் வெட்டு

இலங்கை கடற்பரப்பில் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவருக்கு வாள் வெட்டு காயம் ஏற்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் மீன்பிடிக்கசென்ற நம்பியார் நகரை சேர்ந்த 7 மீனவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் 3... Read more »

பலத்த பாதுகாப்புடன் இலங்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்க ராஜதந்திரிகள்

நேற்றிரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள் குழு இன்று (15) பிற்பகல் தமது விமானங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் இன்று (15ஆம் திகதி) பிற்பகல் 02.35 மணியளவில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-17A விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.... Read more »

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில் நேற்று(15.02.2023) கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 250 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »