யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில் நேற்று(15.02.2023) கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 250 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews