பலத்த பாதுகாப்புடன் இலங்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்க ராஜதந்திரிகள்

நேற்றிரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள் குழு இன்று (15) பிற்பகல் தமது விமானங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று (15ஆம் திகதி) பிற்பகல் 02.35 மணியளவில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-17A விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இந்த குழு வெளியேறுவதற்காக பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வாகனங்கள் வரிசையில் வந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு சுமார் 03 மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த விமானங்களை ஏற்றுவதற்கு ரேடியோ கார் மற்றும் கடுமையான பாதுகாப்புக் காவலர்களுடன் லொறி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews