நாவற்குழியில் பசுமை அறிவொளி பசுமை இயக்கத்தின் சூழல்தின நிகழ்ச்சி..!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழியில்  திங்கட்கிழமை ( 05 06.2023 ) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி... Read more »

இன நல்லிணக்க நிழ்வு ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது….!

இன நல்லிணக்க நிழ்வு ஒன்று 06.06.2023  கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிண்கம் மற்றும் அரச கரும மொழிள் அமைச்சின் மொழிகள் கற்றைபீட மண்டபத்தில் இடம்பெற்றது. அனுராதபுரத்திலிருந்து குறித்த நிலையத்திற்கு  காலை ஒரு குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். அனுராதபுரத்தில் தமிழ் மொழி... Read more »

யுத்த காலத்தில் செய்தி தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்திய அரசு இன்று மீண்டும் கட்டுப்படுத்த முனைகின்றது – பிரஜைகள் குழு செயலாளர் சி.ஜீவநாயம்

யுத்த காலத்தில் செய்தி தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்திய அரசு இன்று மீண்டும் கட்டுப்படுத்த முனைகின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயம் தெரிவித்துள்ளார். ஒளிபரப்பு அதிகார சபை கட்டளைச்சட்டம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 06.06.2023 ... Read more »

கஜேந்திர குமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் சற்று முன்னர்   அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த சில... Read more »

மின்சாரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் அலுவலக பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் திறக்கும்!

எதிர்வரும் 10ம் திகதி முதல்  சனிக்கிழமைகளிலுமவ  யாழ்.பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின்  பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது... Read more »

நெடுந்தீவு கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு…!

யாழ்.நெடுந்தீவில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »

துன்னாலையில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கயிற்றால் சுருக்குபோட்டு கீழே விழுத்தி நகைகள் கொள்ளை!

யாழ்.வடமராட்சி – துன்னாலை பகுதியில் மாடு பிடிப்பதுபோல் கழுத்தில் கயிற்றினால் சுருக்கு போட்டு நிலத்தில் இழுத்து வீழ்த்தி அணிந்திருந்த நகைகளை அபகரித்து சென்ற திருடனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துன்னாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த து.மாசிலாமணி என்ற வயோதிப பெண்மணியே ஒரு சோடி... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் வந்தனர்.... Read more »

வரணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி….!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி  பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் குறித்த சம்பவம் வரணி  அம்மா கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவிற்கு சென்று திரும்பி வந்து... Read more »

அமரர் சிவசிதம்பரத்தின் 21 வது நினைவேந்தல் நேற்று இடம்பெற்றுள்ளது.

அமரர் சிவசிதம்பரத்தின் 21 வது நினைவேந்தல் நேற்று காலை  8:30 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு சதுக்கத்தில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய செயலாளர் இ.ராகவன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு  மலர்... Read more »