ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்த புதிய பொலிஸ்மா அதிபர்..!

நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். அதனையடுத்து... Read more »

குருந்தூர் மலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம்(29) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர்... Read more »

தேசிய மாநாட்டுக்கு தடைகோரிய இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண வழக்கு ஒத்திவைப்பு..!

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக பீற்றர் இளஞ்செழியனால் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியமாநாடு... Read more »

இலங்கை மீது கடும் அதிருப்தியை வெளியிட்ட சீனா

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு ஆராய்ச்சிக்... Read more »

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை…! வழக்கு ஒத்திவைப்பு..!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சித்திரை மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய... Read more »

வேலைவாய்ப்பு தொடர்பில் பண மோசடி: பெண் உட்பட இருவர் கைது

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இத்தாலி தூதரகத்திற்கு சேவைக்காக வரும் நபர்களிடம் வெளியாட்கள் மூலம் பணம் பெற்று... Read more »

புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற... Read more »

இலங்கைக்குள் இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள்..!

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன. இந்த... Read more »

யாழில் பதற்றம் – குவிக்கப்பட்ட பொலிஸார்..!

யாழ்ப்பாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உாிமையாளர்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாகாணத்தில் முறையான பேருந்து தாிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் தனியாா் போக்குவரத்து... Read more »

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று 28.02.2024 பி.ப 02.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது பாடசாலை முதல்வர் திரு.செல்வரட்ணம் பகீரதகுமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை இராமச்சந்திரன்,சிறப்பு... Read more »