எல்லை தாண்டிய வருகையை கண்டித்து யாழில் மீனவர்கள் போராட்டம்!

இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள்எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து... Read more »

யாழ்.தென்மராட்சியில் மீண்டும் கொரோனா தொற்று உயர்வு!

யாழ்ப்பாணம் – தென்மராட்சியை சேர்ந்த மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர். அன்ரிஜென் பரிசோதனைகளிலேயே நேற்று இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். இவர்களில், 8 பேர் அன்ரிஜன் பரிசோதனை மூலமும், மூவர் பி.சி.ஆர் சோதனை... Read more »

வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் கைது!

வடமராட்சி துன்னாலையில் வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 30 வயது பெண்ணே... Read more »

மன்னாரில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில்….!

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more »

யானை தந்த கஜமுத்துக்களுடன் வவுனியாவில் மூவர் கைது!

வவுனியாவில் யானை தந்த கஜமுத்துக்கள் நான்குடன் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் குறித்த வீதியில் பயணித்த சந்தேகத்துக்கிடமானவர்களைச் சோதனை செய்தபோது அவர்களிடம் யானை தந்த கஜமுத்துக்கள் நான்கு மீட்கப்பட்டன. இதையடுத்து, குறித்த யானை... Read more »

பளை மத்திய கல்லூரிக்கு விஐயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை மத்திய கல்லூரிக்கு இன்று (08) இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்தடி சில்வா விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் பிரதம செயலாளர்,மற்றும் மாகாண கல்விப்பணிபாளர்,வலயக்கல்வி அலுவலகத்தின் அலுவலர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது அமைச்சருக்கும் ஆசிரியர்களுக்கும்... Read more »

இராணுவத்தினரால் வீடு ஒன்று அமைக்கப்பட்டு  இன்று கையளிப்பு.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்க்குட்பட்ட இந்திராபுரம் கிரமசேவகர் பிரிவில்  பகுதியில் வீடின்றி வறுமையில் காணப்பட்ட முத்தையா விஜயகுமார் என்பவருக்கு இராணுவத்தினரால் வீடு ஒன்று அமைக்கப்பட்டு  இன்றையதினம்  காலை 11 மணியளவில் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக யாழ்... Read more »

அம்பனில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நெக்டா நிறுவனத்தினால் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் அம்பன் களப்புப் பகுதியில் விடப்பட்டுள்ளன. கடற்தொழில் அமைச்சின் 15 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் வேலைத்திட்டத்தில் இன்று  வெள்ளிக்கிழமை(08) நண்பகல் அம்பன் களப்புப் பகுதியில் இம் மீன் குஞ்சுகள்... Read more »

இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்த டி. சில்வா இன்றைய தினம் பகல் கிளிநொச்சி விஜயம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. அனைத்திற்கும் முன்  பிள்ளைகள் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சிறுவர் தின நிகழ்வில்  கலந்துகொண்டு பல்வேறு உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி... Read more »

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிப்பு.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது வைத்தியசாலைக்கான ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் வைத்திசாலை அதிகாரிகளிடம் இராணுவத்தினரால்... Read more »