யானை தந்த கஜமுத்துக்களுடன் வவுனியாவில் மூவர் கைது!

வவுனியாவில் யானை தந்த கஜமுத்துக்கள் நான்குடன் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் குறித்த வீதியில் பயணித்த சந்தேகத்துக்கிடமானவர்களைச் சோதனை செய்தபோது அவர்களிடம் யானை தந்த கஜமுத்துக்கள் நான்கு மீட்கப்பட்டன.

இதையடுத்து, குறித்த யானை தந்த கஜமுத்துக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

20, 50, 51 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் லியனகமக, மகாவ, நிக்கரவெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், அவர்களிடம் மீட்கப்பட்ட யானை தந்த கஜமுத்துக்களுடன் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணையின் பின் அவர்களை நீதிமன்றில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews