விலக தருணம் பார்த்து காத்திருக்கும் அமைச்சர்கள் –

நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர், முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் பகிரப்பட்ட... Read more »

திட்டமிடாத சந்திப்பு! இலங்கை தொடர்பான முக்கிய குழுவை சந்தித்தார் ஜி.எல்.பீரிஸ்! –

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடப்படாத சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இலங்கையின் வெளியுறவு அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. ஐக்கிய நாடுகள்... Read more »

இலங்கையை நாசம் செய்த ராஜபக்ஷ சகோதரர்கள்! சர்வதேச ஊடகம் பகிரங்க குற்றச்சாட்டு –

இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் சகோதரர்கள் தொடர்பில் சர்தேச புகழ் பெற்ற Bloomberg சஞ்சிகை ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், “கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல் பிரஜை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நாட்டில் பல... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி..! பிரதமர் கலந்கொண்ட நிகழ்வில் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்… |

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. பிரதமரின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.நயினாதீவில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு... Read more »

பருத்தித்துறையில் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில்…..!

பருத்தித்துறை துறைமுகத்திற்கு  அண்மித்த பகுதியில் லிட்றோ எரிவாயு  நிறுவனம்  தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை பெற்றுக் கொள்வதற்கு  வெற்று எரிவாயு கொள்கலன்களுடன்  வாடிக்கையாளர்கள் மிக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். இன்று காலை 10:30 மணி முதல் litro  எரிவாய நிறுவனம்  தனது வாடிக்கையாளர்களுக்கு... Read more »

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது! – இலங்கைக்கு கிடைத்த இடம்.!

ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 127வது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்149 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் இருந்தது. இதன்படி, ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடாகக்... Read more »

போலிகளை கண்டு ஏமாற வேண்டாம். வி.ஆனந்தசங்கரி…..!

தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அண்மை காலமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரினை பாவித்து ஒரு குழு ஊடக மாநாடுகளையும்.  கூட்டங்களையும் நடார்த்தி அதனை பத்திரிக்கை வழியாகவும், சமூக ஊடகங்களின் மூலமாகவும் வெளிப்படுத்தி வருகின்றது. இக்குழுவினர் உத்தியோக பூர்வமாக எந்த ஆதாரமும் இன்றி தாங்களே... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம்…!

பதவியாசை, பணத்தாசை,பிடித்து அலைபவர்களிற்கு எமது பாசப்போராட்டம் புரியப்போவதில்லை என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சிறிலங்கா அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.அது தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வெளியிட்ட... Read more »

மாற்றியமைத்துவிட்ட நிலையில் நாங்கள் மீண்டும் கட்டியமைத்துக்கொண்டிருக்கின்றோம்!மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன்

நாங்கள், கலாச்சாரம் மேம்பட்ட இனமாக இருந்த நிலையில் யுத்தம்,  இடப்பெயர்வு எங்களை முழுமையாக மாற்றியமைத்துவிட்ட நிலையில் நாங்கள் மீண்டும் கட்டியமைத்துக்கொண்டிருக்கின்றோம் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தினம்….!

கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம்  மற்றும் கிளிநொச்சி மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு நேற்று  சிறப்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில்... Read more »