நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் மரணம்; பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு.

காலி கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் களப்பு ஒன்றில் நீராடுவதற்கு சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார். சுமார் 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம்... Read more »

3,500 மெட்ரிக்தொன் எரிவாயுவுடன் கப்பல் கொழும்புக்கு நாளை வருகை.

3,500 மெட்ரிக்தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று பகல் 1.00 மணயளவில் கொழும்பை அண்மிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையானது வழமைக்கு திரும்புமாயின் குறித்த கப்பலானது கெரவலப்பிட்டிய லிட்ரோ இறங்கு முனையத்தில் நங்கூரமிடப்படும் என்றும் பரிசோதனைக்கு... Read more »

கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு மரதன் ஓட்ட நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கிளிநொச்சியிலும் மரதன் ஓட்ட நிகழ்வு.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 29.05.2022 இன்றைய தினம் பிரித்தானியா எடின்புரோ நகரத்தில் நடைபெறும் வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு மரதன் ஓட்ட நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கிளிநொச்சியிலும் மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. குறித்த மரதன்... Read more »

பயறுச் செய்கையில் ஈடுபடும் 14,000 குடும்பங்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை

பயறு செய்கையில் ஈடுபடும் 14,000 குடும்பங்களுக்கு தலா 18,000 ரூபாயை உதவித்தொகையாக வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி... Read more »

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு விசேட உரை –

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். தனதுரையில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளார். Read more »

தனது பிள்ளையை தேடிய மேரி மற்றிமா புஸ்பராணி அம்மா  தாய் மரணம்……!

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்  முன்னாள் தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடி அறிவதற்கான போராட்டத்தை கடந்க  2015 ஆம் ஆண்டு ஆரம்பித்தவருமான திருமதி மேரி பற்றிமா புஸ்பராணி அவர்கள் இன்றைய தினம் அதிகாலை மாரடைப்பு காரணமாக... Read more »

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு..!

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன்  அரிசி நிவாரண பொருட்கள் பொதி  செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை... Read more »

சுன்னாகம் பொலிஸாரால் சுமார் 2 ஆயிரம் லீட்டர் எரிபொருள் மீட்பு.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று   சனிக்கிழமை  சுன்னாகம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலை தெற்கு பகுதியில் உள்ள தனியார் கடையொன்றில் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணை... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட பதிவு உண்மைக்கு புறம்பானது…….!சுப்பர்மடம் மீனவர்கள்.

நேற்று தினம் 27/05 வடமராட்சியிலுள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் பல சேர்ந்து மீன்பிடி அமைச்சர் கே என் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அவரது அலுவலகத்திற்கு சென்று  மண்ணெண்ணெய் தட்டுப்பாடு தொடர்பில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்க்கு சென்றதாகவும் தாம் தமது கோரிக்கைகளை எழுத்து... Read more »

சவாரி விடந்தை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து சிறீதரன் எம்.பி ஆராய்வு.

கிளிநொச்சி சோலைநகரில் நீண்ட காலமாக இருந்து வந்த சவாரி விடந்தையை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அப் பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் குறித்த விடந்தை அமைந்திருந்த பகுதிக்கு சென்று நேற்று  விடயங்கள்... Read more »