3,500 மெட்ரிக்தொன் எரிவாயுவுடன் கப்பல் கொழும்புக்கு நாளை வருகை.

3,500 மெட்ரிக்தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று பகல் 1.00 மணயளவில் கொழும்பை அண்மிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையானது வழமைக்கு திரும்புமாயின் குறித்த கப்பலானது கெரவலப்பிட்டிய லிட்ரோ இறங்கு முனையத்தில் நங்கூரமிடப்படும் என்றும் பரிசோதனைக்கு 10 மணித்தியாலங்கள் செல்லும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எரிவாயு செயன்முறை திட்டமிட்டப்படி நடக்குமாயின், எதிர்வரும் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews