சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார் மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.... Read more »

பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இலங்கை..!

பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக பேசப்படும்.... Read more »

தேர்தல் பிற்போடப்படாது; அரசுக்கு எதிராக எதிரணி கற்பனையில் பிரசாரம்!

பாராளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இரண்டு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக தேர்தல்கள் பிற்போடப்படுமென எதிரணியினர் கற்பனையில் பிரசாரம் செய்வதாக  நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக கரிசனைகள் கொள்ளப்பட்டு வருகின்றன.... Read more »

குழப்பத்தில் ஆளும் தரப்பு; எந்த தேர்தலையும் முகங்கொடுக்க நாம் தயார் – பெரு வெற்றி உறுதி! எதிர்க்கட்சி அதிரடி

எந்தவகையான  தேர்தலையும் முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது என அக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியானது எந்தத் தேர்தலிலும் பெருவெற்றி பெறும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் தான் தற்போது ஆளும் தரப்பினர்... Read more »

பிரமாண்டமாக நடக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தை மருதானை சந்தியில் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணியை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு... Read more »

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் செயலாளாராக கோவிந்தன் கருணாகரம்(ஜனா),தேசிய... Read more »

மண்ணை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் – செல்வம் எம்பி ..!!

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்? மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும்…!

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பேராயர் இல்ல வளாகத்தில் இன்றையதினம்(23)  ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »

மைத்திரியை உடனடியாக கைது செய்யுங்கள்…!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார்... Read more »

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுக போகத்துக்கு செலவழிக்கும் பணத்தை விவசாயிகளுக்கு வழங்குங்கள்…! சாணக்கியன் எம்.பி

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திற்கு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் நேற்றையதினம்(22)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில்... Read more »