பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இலங்கை..!

பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக பேசப்படும்.

பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர்களே ஆட்சிக்கு வரவேண்டும்.

தொலைநோக்குப் பார்வையே பிரதானமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை. என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews