இந்து மதகுருவுக்கு கண்டபடி பேச்சு, பௌத்த மதகுருவை கண்டவுடன் பம்மிக் கொண்டிருந்த சண்டியர்கள்..! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்… |

யாழ்.பரமேஸ்வரா சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்கு காத்திருந்தவர்கள் எரிபொருள் பெறுவதற்கான வரிசையை குழப்பியதாக இந்து மத குரு ஒருவரை பேசி அனுப்பிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அதேபோல் வரிசையை குழப்பிய பௌத்த பிக்குவை பண்டு பம்பிக் கொண்டிருந்த சம்பவம்... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஐனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு! நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறும் பணிப்பு.. |

நாட்டுக்கு தற்போது கிடைத்துள்ள எரிபொருள் மற்றும் அடுத்துவரும் நாட்களில் கிடைக்கவுள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பகிர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பணித்துள்ளார். மத்திய வங்கியுடன் இணைந்து, அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புக்களை பெற்று,... Read more »

பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதுமுள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் முகமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை செலுப்படியாகும் எனவும் கல்வி... Read more »

கோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது….!

யாழ்.கோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தினர். இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 தொடக்கம் 58 வயதிற்கிடைப்பட்டவர்கள்... Read more »

போத்தல் குத்துக்கு இலக்காகிய இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி….!

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் போத்தலை உடைத்து தாக்கியதில் இரு குடும்பஸ்த்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது. இரு குடும்பஸ்த்தர்களுக்கும் வேறு இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் குடும்பஸ்த்தர்கள் மீது போத்தலை உடைத்து குத்திய நிலையில் படுகாயமடைந்த இருவரும்... Read more »

இலங்கையில் இருந்து மேலும் ஏழுபேர் தமிழகம் சென்றனர்.

மன்னார் திருகோணமலையைச் சேர்ந்த 7 பேர் தமிழகம் சென்றனர்.. தமிழகம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வெள்ளிக்கிழமை  அதிகாலை 7 பேர்  தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச்... Read more »

யாழ்.மாவட்டத்தில் நள்ளிரவு தாண்டியும் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்..!

யாழ்.மாவட்டத்தில் ஒரு பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே நேற்றய தினம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்த நிலையில், எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் நள்ளிரவை தாண்டியும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  நேற்று காலை தொடக்கம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுவந்தபோதும் 1000 ரூபாய்க்கு மட்டுமே பெற்றோல் விநியோகம்... Read more »

பருத்தித்துறையில் நள்ளிரவில் வீடு புகுந்து அறுவருக்கு வாள்வெட்டு; நகைகள் கொள்ளை – மூவர் சிக்கினர்

பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 தங்கப் பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட நகைகளில் ஐந்தரைப் பவுண் நகைகள்... Read more »

அடுத்த இரண்டுவாரம் என்ன செய்வது,ஜனாதிபதி, பிரதமருடன் அம்சங்கள் ஆலோசனை…!

எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு திங்கள் கிழமை தொடக்கம் வீட்டிலிருந்து வேலை மற்றும் இணையவழி கற்றல் – கற்பித்தல் நடைமுறைகளை மீளவும் நடைமுறைப்படுத்த அரசு ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றும் பிற ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து நாளை இறுதி... Read more »

இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை.விசேட அறிவிப்பு….!

நாடு முழுவதும் சகல பாடசாலைகளுக்கும் இன்று  வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. Read more »