க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

எரிபொருள் நெருக்கடியால், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தவுடன், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மீள ஆரம்பிக்க உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.... Read more »

22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பவ்றல் குற்றச்சாட்டு…!

நாட்டில் 22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். திருத்தங்களுக்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை உள்ளடக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரல் கைது.

கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கரடிப்போக்கு சந்திப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி போலீஸ் சிறப்பு பிரிவின்  பொலிஸ்  அத்தியட்சகர் மெதவல  அவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நேற்றைய தினம்  02.07.2022சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் 850 லிட்டர்... Read more »

கிளிநொச்சியில் சிறார்களை சீரழிக்கும் இராணுவ பூங்கா – கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாழிகிதன்!

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கிளிநொச்சி நகரப்பகுதியில் இராணுவத்தினரின் சிறுவர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. குறித்த பூங்காவில் தினமும் கல்வி பயிலும் சிறுவர் ,சிறுமிகள் என பலர் குறித்த பூங்காவில் சமூக சீர்கேடாக நடந்து கொள்கின்றமையை பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டி... Read more »

படிக்கட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் மரணம்..!

படிக்கட்டில் தடுக்கி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்.கரவெட்டியை சேர்ந்த அனுரா அனுஷாந் (வயது34) என்ற இளம் குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நிலையில்,  கடந்த 30ம்... Read more »

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி..!

இலங்கைக்கு சுமார் 90 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் 3 கப்பல்கள் 13ம் திகதிக்கும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கும் இடையில் வருகைதரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொன்றும் தலா 30,000 மெற்றிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முதலாவது... Read more »

சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் வழங்க மறுத்த பொலிஸ் அதிகாரி..! சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை காட்டம்… |

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு மறுப்பு தெரிவித்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்த பொலிஸார் மீதும் காணப்படும்... Read more »

யாழ் கண்டி வீதியை மறித்து மக்கள் போராட்டம் ….!

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக காத்திருந்தும் தமக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் கோபமடைந்த மக்கள் யாழ்ப்பாணம் – கண்டி வீதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக... Read more »

பழைய துவிச்சக்கர வண்டிகளை வாங்க முண்டியடிக்கும் பொதுமக்கள்..! திருத்த வேலைகளுக்கு மட்டும் 35 ஆயிரம் ரூபாய் செலவாம்.. |

இரும்புக் கடைகளில் பழைய துவிச்சக்கர வண்டியை வாங்குவதற்கும் மக்கள் முண்டியடிக்கும் சம்பவங்கள் வடமாகாணம் முழுதும் நடந்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டி பயன்பாடு அதிகம். நாட்டில் புதிய துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 85... Read more »

சற்றுமுன்னர் கிளிநொச்சியில் பேருந்து நடத்துனரிடம் கொள்ளை. கிளிநொச்சியில் சம்பவம்.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்துனரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச்... Read more »