இன்றைய நாணய மாற்று விகிதம்! ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய யாழ். பேருந்து நிலையம் : மாநகர சபையுடன் முரண்பட்ட வியாபாரிகள்

திடீரென பெய்த மழை காரணமாக யாழ்.பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வியாபாரிகள் இதன்போது யாழ்.மாநகரசபையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கால்வாய்களுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் தேங்கியுள்ளநிலையில், மழைநீர் செல்வதற்கான வழியின்றியே இவ்வாறு வெள்ளநீர் தேங்கியுள்ளதாக... Read more »

முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்! – நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முட்டையின் விலையில் திருத்தம் செய்யவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டே இந்த விலை மாற்றம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பல்பொருள் அங்காடிகளில் பொதி செய்யப்பட்ட முட்டைகளை... Read more »

நீதி கிடைக்கும் வரை வீதியில் இறங்கிப் போராடுவோம்: சபையில் கஜேந்திரன் எம்.பி.எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்கும், தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் ஒரு சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் செயற்படுகின்றாரா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

இலங்கையின் கடன் விவகாரம் – களத்தில் இறங்கப்போகும் ஜப்பான்

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு கடன் வழங்கும் ஏனைய நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜப்பான் முன்னெடுக்கும் என்றும்... Read more »

சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்ட கால விசா வகையை அறிமுகப்படுத்திய இலங்கை!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நீண்ட கால விசா வகையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு,யாழில் இன்று(30) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் முன்பாக இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக... Read more »

ஈராக் போராட்டத்தில்15 பேர் பலி: நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு

ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்... Read more »

இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு: நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதி அமைச்சர் என்ற வகையில்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நிகழ்த்துகின்றார். 2022 ஆம் ஆண்டின் எஞ்சிய... Read more »

கட்சி அரசியலுக்குள் சிக்குப்பட்டிருக்கும்  தமிழ்த் தேசியம்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லை. தனித்தரப்பாக பங்குபற்றக்கூடிய நிலை இருந்தும் ஒதுங்கியே நிற்கின்றது. இவ்வாறு ஒதுங்கி நிற்பதற்கான காரணிகளில் கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியல் பின்பற்றப்படுகின்றமை, தனித்தரப்பாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பையும், முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ளாமை என்பவற்றைச் சென்ற... Read more »