இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு: நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதி அமைச்சர் என்ற வகையில்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நிகழ்த்துகின்றார்.

2022 ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்திற்கான இந்த ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் திருத்தமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை(31) முதல் எதிர்வரும் 02ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin