திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார். பாரத தேசம் அவருடைய உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தது. இன்னும் பாரத தேசம் இலங்கை தீவிலிருக்கின்ற தமிழர்களின் கோரிக்கையை மதிக்காமலுள்ளது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். திலீபனின் உருவப்படம் தாங்கிய... Read more »
அசர்பைஜான் எல்லைப் பாதுகாப்பு படையினர் நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளனர். அசர்பைஜானின் Beylagan மாவட்டத்தில் Birinji Shahsevan என்ற கிராமத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானுடனான அசர்பைஜான் எல்லையை கடக்க முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் Horadiz எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »
ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள் தொடர்பில் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனின் காக்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். மாணவர்கள்... Read more »
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பலதீர்மானங்கள்... Read more »
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய பெண்ணொருவர் இன்று புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம், இபுனுபதுதா வீதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட... Read more »
ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் தங்கியிருந்த ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது இறுதி நாட்களில் துடுக்காகவே காணப்பட்டாலும், உணவை மிகவும் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது 96வது வயதில் தமக்கு மிகவும் பிடித்தமான பால்மோரல் மாளிகையில் வைத்து காலமானார். தமது இறுதி நாட்களில் அவர் துடுக்காகவே... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். எனினும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகலை சேர்ந்த சித்தியும் (வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு பிறந்தநாள்... Read more »
பணப்பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நிறுவனங்களில் அன்றாட... Read more »
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற மினிவான் மீது பாரவூர்தி மோதியதில் 19 மாணவர்கள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் தென்னாபிரிக்காவில் நடந்துள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு – நடால் மாகாணத்தில் ஆரம்ப பாடசாலை... Read more »
தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்குவது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. ... Read more »