துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

கம்பஹா – தங்கோவிட்ட நகரில் மதுபானசாலையொன்றில் கொள்ளையடித்து தப்பிச்செல்ல முற்பட்டபோது, பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையில் இருப்பதாகவும் வெலிசர நீதிவான் அவர்களை பரிசோதித்த பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி... Read more »

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேலுமொரு மாணவர் காணாவில்லை….!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த 25 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். கடவத்தை, கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார்... Read more »

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு கடற்றொழிலாளர்களுக்கு பாரிய பாதிப்பு…! சஜித்.

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமதாக இருந்த காலத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார... Read more »

மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட மேலும் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்.

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கமைய, ஜனாதிபதி செயலாளரின் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள்... Read more »

கட்டாய ஓய்வு வயதுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், ஜனவரி 2023 முதல் அரச துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமைக்கும் சுற்றறிக்கையை வெளியிடவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இடைக்கால... Read more »

22வது திருத்தச்சட்டம் தொடர்பில், ஆளுங்கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடு.

இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற குழுவுடன் கலந்துரையாடி அது குறித்த ஆராய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் தலைமையில் நேற்று  முன்தினம் இடம்பெற்ற... Read more »

ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இருந்தாலும் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கவில்லை – இரா.சாணக்கியன் எம்.பி.

ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இருந்தாலும் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் கதைக்கும்போது ஏற்றுமதி, இறக்குமதி வரியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களினூடாக நாட்டின் பொருளாதரத்தில் மாற்றத்தை... Read more »

பளை மத்திய கல்லூரிக்கு தடைதாண்டலில் தங்கம்!

நடைபெற்றுவரும் வடமாகாண தடகள விளையாட்டுப்போட்டியில் 14வயது ஆண்களுக்கான தடைதாண்டலில் K.தனதீபன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளர். வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஹரிகரன், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் டிலக்சன் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இதுவரை எமது கல்லூரிக்கு 2 தங்கப்பதக்கங்களும் , 2 வெள்ளிப்பதக்கங்களும் கிடைத்துள்ளது. Read more »

யாழில்  அட்டைப் பண்ணைகள் அதிகரிப்பதால் மக்கள் கடல் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்…! சம்மேளனத் தலைவர் அன்னராசா எச்சரிக்கை.

யாழ்குடா கடலில் அதிகரித்துவரும் கடல் அட்டைப் பண்ணைகளால் சில வருடங்களில் யாழ்ப்பாண மக்கள் தமக்குத் தேவையான கடல் உணவைப் பெற முடியாத திண்டாட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை... Read more »

சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இலவச கல்வி நிலையங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினமும் நவராத்திரி விழாவும்…!

வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய அதிகஷ்ட பிரதேசங்களில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இலவச கல்வி நிலையங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினமும் நவராத்திரி விழாவும் மிகச் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களினால் வளர்க்கப்பட வேண்டிய பாரம்பரிய பண்புகளான பெரியோரை கனம் பண்ணுதல்,... Read more »