வல்வெட்டித்துறையில்  வாள் வெட்டுக்குழு அட்டாகசம், ஒருவர் படுகாயம்….!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியிருந்தனர். படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் அயலவர்களினால் பிடித்து... Read more »

வெற்றிலை வைத்து வணங்கினாலும் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டேன்-ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி

பதவிக்காலம் முடியும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை ஜனாதிபதி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 22 வது அரசியலமைப்புத் திருத்தச்... Read more »

இலங்கை மக்களின் வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை

நாட்டின் மக்களின் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக மாத்திரம் செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவில் தெரியவந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே சரியான ஊட்டச்சத்துள்ள... Read more »

ஓட்டோ சாரதிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அதிகரிக்கப்படுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (18) ஐ.ம.ச. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எமது நாட்டில்... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் வாக்குறுதி

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர்,... Read more »

அரச அதிகாரிகளின் சம்பளம் – நிதியமைச்சுக்கு சென்ற பரிந்துரை

பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன. மின்சார சபை, லிட்ரோ நிறுவனம், துறைமுக அதிகார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் அசாதாரண... Read more »

யாழில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கும் போது அதிகாலையில்  உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து... Read more »

கனடாவில் தமிழர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி

கனடாவின் – Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிய சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக சரண்!

போதைப் பொருளுடன் கைதாகி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது தப்பி ஓடிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தப்பி ஓடிய சந்தேக நபருடன் தேடப்பட்டுவந்த மற்றொரு நபரும் இணைந்து சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதேவேளை குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து... Read more »

புத்தூரில் விமானப்படை புலனாய்வாளர்களால் ஒருவர் கைது…!

யாழ்.புத்துார் – ஆவரங்கால் பகுதியில் சுமார் 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆவரங்கால் கிழக்கு – புத்துார் பகுதியை சேர்ந்த 43 வயதான நபர் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்டவரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை... Read more »