தலங்கமவில் வர்த்தகர் கொலை: சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம்

கொழும்பு பத்தரமுதல்ல – தலங்கம பிரதேசத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே தொழிலதிபரை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம்... Read more »

13வது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் உள்ள சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்மேற்கொண்டுள்ளது, மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள்உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய குழு  யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு... Read more »

பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

சொகுசு பேருந்து மோதியதில் வயோதிப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று பிலியந்தலை – மிரிஸ்வத்த சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார். பூப்பறிப்பதற்காக வீட்டிலிருந்த... Read more »

இலங்கையில் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் -500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாக தேசிய மக்கள் படையின் பொதுச் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்வைக்கும் நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான வரி விதிப்பினால் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி... Read more »

பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் ஆபத்தில் இலங்கை விமான சேவை

விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக பதவி விலகுவதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு 138 விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்பட்ட போதிலும் தற்போது 81 அதிகாரிகள் மாத்திரமே சேவையில் இருப்பதாக அந்த... Read more »

மின் கட்டண அதிகரிப்பு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 13ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு... Read more »

மோசமான பேரழிவு -துருக்கி அதிபர் வர்ணிப்பு – பலி எண்ணிக்கை 2300 ஐ கடந்தது

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிரிய பகுதியில் 810 பேர்... Read more »

திடீரென பதவி விலகிய தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் தலைவரும் கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை சேயோன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் மற்றும் கட்சியின் தற்காலிக பொது செயலாளருக்கு பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »

வடக்கு – கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க வேண்டும்: த.கலையரசன்

இந்த உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும் என்றும், 2023இல் வடக்கு – கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்... Read more »

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி அஞ்சவில்லை -ரோஹித அபேகுணவர்தன எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலை பாரியளவில் வெற்றிக்கொள்வோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்... Read more »