பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

சொகுசு பேருந்து மோதியதில் வயோதிப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று பிலியந்தலை – மிரிஸ்வத்த சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார். பூப்பறிப்பதற்காக வீட்டிலிருந்த வீதியைக் கடந்து சென்று மீண்டும் அதே வீதியைக் கடந்து வீடு திரும்ப முற்பட்டவேளை, பிலியந்தலையில் இருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த சர்வதேச பாடசாலைக்குச் சொந்தமான சொகுசு பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பேருந்து சாரதி கவனக்குறைவாகப் பேருந்தை செலுத்தியதே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்இ அவரை கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews