மட்டக்களப்பு கரடியனாற்றில் புதையல் தோண்ட மற்பட்ட லெப்டினன் கேணல் ஒருவர் தேரர் ஒருவர் உட்பட 4 பேர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் முற்பட்ட ஈடுபட்ட இராணுவ லெப்டினன் கேணல் ஒருவருடன் 3 இராணுவத்தினர் மற்றும் பௌத்த தேரர் உட்பட 4 பேரை இன்று வெள்ளிக்கிழமை (31) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிசார்... Read more »

வெடுக்குநாறிக்கு சிவபூமியால்  7இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு..!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய... Read more »

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகம் உடைப்பு வழக்கு ஒத்திவைப்பு

வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் 10 திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை பெற... Read more »

என்னை வாளால் வெட்டியவர்கள் மீது வானை ஏற்றியே கொலை செய்தேன் – சந்தேகநபர் பரபரப்பு வாக்குமூலம்!

தன்னை வாளால் வெட்டிக் காயப்படுத்தியவர்கள் மீதே வாகனத்தால் மோதி கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திரபுரம் பகுதியில் ஏ – 9 வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்... Read more »

நாளைய போராட்டத்திற்கு சரவணபவன் அழைப்பு!

தமிழர் தேசத்தின் ஆன்மாவைச் சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக நாளை சனிக்கிழமை சங்கானை சந்தை முன்பாக காலை 9.30 மணிக்கு அறவழியில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தப் போராட்டம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்... Read more »

தந்தையை கொலை செய்த மகன்கள் இருவர் உட்பட மூவர் கைது!

மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் பிள்ளைகள் உட்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவரின் 18, 19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே கொலையை... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு…!

இறுதி யுத்தத்தின்போது குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்வதாக கூறி இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களின் நிலை தொடர்பில் பதில் வழங்க வேண்டும் என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்... Read more »

பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உயர்தர  பெண்கள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மை வல்லுனர் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்திய இசைவாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். பின்னர் மங்கல விளக்கேற்றல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.... Read more »

பூநகரியில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளிற்கு தீர்வு காணும் மக்கள் சந்திப்பு…!

தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளிற்கு தீர்வு காணும் மக்கள் சந்திப்பு இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் பள்ளிக்குடா... Read more »

மரக்கறிகளின் விலை குறைவடையும் சாத்தியம்!

எரிபொருள் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலையும் குறையும் என அனைத்து இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களும் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை குறைவினால் மரக்கறி செய்கைக்கான செலவுகள், கொள்வனவிற்கான போக்குவரத்து செலவுகள் குறையும் என அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more »