கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் அதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசை…!

கிளிநொச்சியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் அதேவேளை, எரிபொருள் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையும் காணப்படுகின்றது. வைத்தியசாலை சேவை உட்பட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், பொது போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை Read more »

பளையில் இராணுவ கண்காணிப்பில் ஊரடங்கு!

நேற்றைய தினம் (02) மாலை 6.00மணியில் இருந்து திங்கள் காலை 6.00மணி வரை குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இன்றைய  காலையில் இருந்து சமூக வலைத்தளங்களும் மாலை வரை  முடக்கப்பட்டிருந்தது. தென்  இலங்கையில் ஐனாதிபதிக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்... Read more »

திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? ஆய்வாளர் நிலாந்தன்..!

கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை... Read more »

ஊரடங்கு நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு தடை விதிப்பு.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு எதுவும் நடத்த முடியாது என்று யாழில் பொலிஸார் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த அலுவலகத்திற்குச் செய்தியாளர்கள் சென்ற வேளை,... Read more »

அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட பேராதனை பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்.

ஊரடங்கு உத்தரவை மீறிப் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸாரால் மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை... Read more »

வாகனங்களில் இலச்சினைகளை அகற்றிய எம்.பிக்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் தமது வாகனங்களில் முன் கண்ணாடியில் காட்சிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலச்சினையை அகற்றியுள்ளதாக தெரியவருகிறது. இதனை சிலர் நாடாளுமன்றத்தின் பிரதான அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்கும் மக்களிடம் இருந்து ஏதேனும்... Read more »

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது. ஏதிர்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இம்ரான் கான்!

நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி ஏற்றுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கமே காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா... Read more »

மற்றுமொரு விலை அதிகரிப்பு.

மீண்டும் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை சுமார் ரூ.85,000 வரை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி 254,500 ரூபாவாக இருந்த ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்போது 339,500 ரூபாயாக உள்ளது. அதன்படி, முன்பு ரூ.1,040-க்கு விற்பனை செய்யப்பட்ட... Read more »

ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் வெடித்தது போராட்டம்! திணறும் படையினர்.

அரசாங்கம் விதித்த வார இறுதி ஊரடங்கு உத்தரவை மீறி 12க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து கொழும்பு... Read more »

மாதிபொல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை.

கலேவெல-மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மாதிபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் ... Read more »