இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேன்துறை கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இவர்கள் தமிழ்நாடு மாநிலம் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம்... Read more »
யாழ் போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு அண்மை நாட்களாக நிலவி வரும் சூழலில் வடமராட்சி அம்பன் பகுதியில் இரத்ததான முகாம் ஒன்று இன்று(15) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”என்ற தொனிப் பொருளில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளை மருதங்கேணி பிரிவினரால்... Read more »
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணி விரைவில் நிறைவடையுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையிலேயே, அமைச்சின் செயலாளர் வியனி குணதிலக இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள... Read more »
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று ஆலயத்திற்குச் சென்றவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் காவல்துறையினர் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(14) வியாழக்கிழமை... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கடந்த 13.04.2024 புதன் கிழமை மருதங்கேணி கடற்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக குலைகளை கடலில் போட்டு கணவாய் பிடிப்பதற்காக கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு... Read more »
ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று(13)) ஒருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வெற்றிலைக்கேணியை... Read more »
சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹொங், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே... Read more »
தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் அடங்கிய பட்டியலில் இடம்பிடித்துள்ள இருவரும் தமிழ் பேசும் பெண்கள் என்பது விசேட அம்சமாகும். தொழில்முனைவோர், ஊடக நிர்வாகிகள்,... Read more »
இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சியும், செயல்முறையும் இன்று பரந்தன், பன்னங்கண்டி பகுதிகளில் நடைபெற்றது. கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சியில் விவசாயிகள் கமநலசேவை திணைக்களத்தினர், விவசாய போதனாசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் இதன்... Read more »
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் காரைநகர் – ஊரி பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர், சட்டத்தரணி திருமதி.அம்பிகா அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த... Read more »