வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கடந்த 13.04.2024 புதன் கிழமை மருதங்கேணி கடற்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக குலைகளை கடலில் போட்டு கணவாய் பிடிப்பதற்காக கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகை வெற்றிலைக்கேணியில் கடற்படை வழிமறித்து கைது செய்தது

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை குறுகிய காலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்த கடற்படையினர் தொடர்ந்து கடல்,தரை என திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே வெற்றிலைக்கேணி பகுதியில் குறித்த எட்டு பேரும் கடற்படையால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews