யாழ் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவந்த சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகம் மாற்றப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதுவரை காலமும் போக்கறுப்பு கிராம சேவையாளர் பிரிவில் இயங்கிவந்த. உப அஞ்சல் அலுவலகத்தை போதிய வருமானம்... Read more »
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெறவுள்ளது. இன்று புதன் கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த நினைவேந்தல்... Read more »
ஜீவநதி ஏற்பாட்டில் மலரன்னையின் அமுதவிழாவும், மலரன்னையின் வாழ்வும் படைப்பும் நூல் வெளியீடு நிகழ்வு 08.01.2024 திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள ராஜா கிறீம்கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான கோகிலா மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையினை ... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில் மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய ருக்கும்,ஏனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த... Read more »
நாட்டில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, வழிபாட்டு தலங்களுக்கான அன்பளிப்புகளை வழங்கும் போதே கௌரவ ஆளுநர் இதனை கூறினார். வடக்கு மாகாண... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம்... Read more »
யாழ்ப்பாண பொலிசாரின் நிர்வாக ஊழல் மற்றும் பொதுமக்கள் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர்... Read more »
வடமராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 70 குடும்பங்களுக்கு குடத்தனை வடக்கை சேர்ந்த தொண்டு நிறுவனமான அகரம் நிறுவனத்தால் பொங்குவோம் பொங்கவைப்போம் என்ற தொனிப் பொருளில் பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று 12.00 ஆரம்பமான குறித்த... Read more »
நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே காவல்துறையினரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார். இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில்... Read more »
யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிசாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று(08) சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த... Read more »