கட்டைக்காட்டு கடற்கரையில் இராணுவத்தினரின் செயல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் இன்று சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவால் முன்னெடுக்கப்பட்ட கசிரமதானபணியில் கிராம அலுவலர்,சென்மேரிஸ் கடற்றொழிலாளர் சங்கம்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள், என பலர் கலந்துகொண்டனர். இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடமராட்சிகிழக்கு பகுதியில் இராணுவத்தினர் சிரமதான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். Read more »

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர தின பேரணி!

இன்றையதினம் இலங்கையின் 76வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சுதந்திர தின பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்து மக்களும் வெளிமாவட்ட மக்களும் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான பேரணி வைத்தியசாலை வீதி... Read more »

சாவகச்சேரியில் கசிப்புடன் ஒருவர் கைது!

நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை பகுதியில் 20 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில்... Read more »

இரு தேசங்கள் உண்டென்பதை கரிநாள் பேரணியில்  பங்கேற்று முரசறைவோம் – ஈ.சரவணபவன் அறைகூவல்

இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் உண்டு என்பதை மீண்டும் ஒரு தடவை உணர்த்துவதற்கு, தமிழர்கள் நாங்கள் ஓரணியாக கரிநாள் போராட்டத்தில் பங்கேற்கவேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால்... Read more »

கட்டைக்காட்டில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான மரதன் போட்டி

சிறுவர் எழுச்சிவாரத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சிறுவர்,சிறுமிகளுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. கப்பலேந்தி மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை 07.00மணிக்கு வெற்றிலைக்கேணி சந்தியில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில்... Read more »

சந்தியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் கருவி மாற்றுத் திறனாளிகள் அமைப்பின்  கட்டிட  நிர்மாணத்திற்காக  230,000 ரூபா பெறுமதியான 100 பைக்கற் சீமெந்துகளை  ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் நேரடியாக  கொண்டுசென்று வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வெள்ளிக்கிழமை வாராந்த நிகழ்வாக... Read more »

போதைவஸ்து பாவனை காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் 23 வயது குடும்பஸ்தர் உயிரிழப்பு!

.வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்... Read more »

யாழில் கஞ்சாவுடன் கைதான நபர்

யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார் மானிப்பாயைச்சேர்ந்த 46 வயதுடையவரே யாழ் நகரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,... Read more »

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வு

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு, இந்திய கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடனநிகழ்வு 01.02.2024 அன்று யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் ராகேஷ் நட்ராஜ்... Read more »

அளவுக்கு அதிகமான போதையில் வீதியில் விழுந்தவர் உயிரிழப்பு!

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த சிவனடியான் சிவராசா (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »