பிள்ளையானை தொடர்ந்து சாணக்கியனும்…..! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் உள்ள மக்களை குழப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்த வேலன் சுவாமிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நடந்து கொண்ட விதம் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குறித்து அரசியல் தலைவர்கள் ஏன் அச்சமடைகின்றனர் என்ற கேள்வி எழுகிறது ? போராட்டங்களை நடாத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இணக்க அரசியலுக்குள் செல்வதால் வடகிழக்கு மக்களின் உரிமைகளுக்காக மக்களை அணி திரட்டி போராடும் வேலன் சுவாமிகள் போன்றவர்களினால் அரசியல் தலைவர்களின் நிகழ்சி நிரல்கள் குழம்பி விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews