ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம்... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தனது உடை தொடர்பான நடைமுறைகளை மீறியதற்காக நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை நேற்றையினம் (10.01.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே விதிக்கப்பட்டுள்ளது. சமையற்காரர்கள் அணியும் கவசத்தை அணிந்து அவர் வந்திருந்ததாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ... Read more »
வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில்வைத்து வடமராட்சி கிழக்கு தனியார் போக்கு வரத்து பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் இன்று 10/01/2024 புதன்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம்... Read more »
கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட,ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று(10) காலை டைனமைட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவரே உயிரழந்துள்ளார். இவருடைய மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத்துக்கு சென்று ஒன்றரை... Read more »
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(9) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஹேரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே தலைமையில் மடு பொலிஸ்... Read more »
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெறவுள்ளது. இன்று புதன் கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த நினைவேந்தல்... Read more »
களுத்துறையில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறையில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளார். 67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஹோட்டலின்... Read more »
நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே காவல்துறையினரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார். இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில்... Read more »
யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த... Read more »
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் துணை தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவ நிலைகள்... Read more »