முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு காணி ஒன்றில் இருந்து நேற்று T- 56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் பகுதியில் உள்ள தனியார் வீட்டு காணியில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக நேற்று (24) மாலை பொலிஸாருக்கு... Read more »
வவுனியாமகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுளைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதுடன் குடும்பத்தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துச்சென்றனர். குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற சமயத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் தனிமையில் இருந்துள்ளனர். இதன்... Read more »
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆயர்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி... Read more »
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் ஆறு இந்திய பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை விரட்டியடிக்கும் நோக்கில், திங்கட்கிழமை (22-01-2024) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த... Read more »
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள கஹட்டன கனராம மகா விகாரைக்கு காரில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 44 வயதுடைய தேரர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூடு... Read more »
சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் இளந்தொன்றல் விளையாட்டு கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன் , அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் நோக்குடன் இளம் தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் செயற்பட்டு... Read more »
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் 187 கிராம் ஹெரோயின், 126 கிராம் ஐஸ், 14 கிலோ 700 கிராம் கஞ்சா,... Read more »
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. பேருந்துகள் ஒன்றுக்கொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக... Read more »
சிசிடிவி கமராக்கள் ஊடாக போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளுக்கு அபராத பத்திரங்களை வீட்டுக்கு அனுப்பும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். வேலைத்திட்டத்திற்கு பஸ்களை ஒழுங்குபடுத்தினால் பஸ் முன்னுரிமைப் பாதை சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்... Read more »