ஆறு இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் ஆறு இந்திய பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை விரட்டியடிக்கும் நோக்கில், திங்கட்கிழமை (22-01-2024) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையின் போது, மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews