யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த ஐந்து வருடங்களாக இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள். பட்டத்தினை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு இதுவேறையில் உரிய முறையில் அரசு நியமனம் வழங்கப்படாமைக்பு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம்... Read more »

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு!

ஆங்கில வழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற ஆங்கில வழி ஆசிரியர்களை மூன்று வருட காலத்திற்கு இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த ஆசிரியர்கள் தரம் ஆறு முதல் தரம் பதினொன்றாவது வரையான வகுப்புகளுக்கு உள்வாங்கப்பட உள்ளதுடன், தேவைகள் தொடர்பாக அனைத்து... Read more »

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு – நாரஹேன்பிட்ட சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற ‘2024 பாடசாலை உணவுத் திட்டம்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

தொண்டைமானாறு கலையரசி சனசமூக நிலையத்தால் கெளரவிப்பு நிகழ்வு

வடமராட்சி தொண்டைமானாறு கலையரசி சனசமூக நிலையத்தால் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் கெளரவிப்பு நேற்று 23.03.2024 சனிக்கிழமை இடம்பெற்றது. மாலை 06.00மணிக்கு கலையரசி சனசமூக நிலைய தலைவர் ச.தினேஷ் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பணிப்பாளர்,விளையாட்டுத் திணைக்களம்,வடமாகாணம், பா.முகுந்தன் அவர்களும் சிறப்பு... Read more »

கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச நீர்தினம்

வருடாவருடம் மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர்தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் மாணவர் மத்தியில் அமைதிக்கான நீர் என்ற கருப்பொருளுக்கு  அமைவாக நீரின் முக்கியத்துவத்தையும், நீரைப் பேணல் முறைகளை அறிந்துகொள்ளும் வகையில் எதிர்காலத்திற்குரிய சுற்றுச்சூழல் அமைப்பினருடன் இணைந்து  கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா... Read more »

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ஆலய நிர்வாகம் மற்றும் பல தரப்பினராலும்... Read more »

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை…!

தென் மாகாணத்தில் உள்ள 3100 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், விரைவில் நேர்காணல் நடத்தப்பட்டு, அடுத்த மாதம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும். அதேவேளை, பிரதேச செயலக... Read more »

பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செய்யும் மற்றுமொரு பேருதவியாக  அமைகின்றது –  நெடுந்தீவின் கல்விச் சமூகம் சுட்டிக்காட்டு!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தீவக மக்களுக்கும் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் ஓர் இரட்சகராகவே இருந்து வந்துள்ளார் என தெரிவித்துள்ள நெடுந்தீவின் கல்விச் சமூகத்தினர் அமைச்சரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களின் நலன் சார்ந்ததாகவே... Read more »

யாழ் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம் நடாத்தும் முதலாவது சர்வதேச இந்து மாநாடு..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில் இன்று நடைபெற்றது. “இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்” எனும்... Read more »

நாட்டில் வேலையில்லா வரிசையில் 40,000 பட்டதாரிகள்..!

அரசியல்வாதிகளின் ஏமாற்று கதைகளுக்கும்இ விசித்திரக் கதைகளுக்கும் அடிமைப்பட்டுஇ அரசியல் அதிகாரங்களின் கைக்கூலிகளாக மாறும் காலம் ஒழிக்கப்பட வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அரசியல், மத, சமூக, கலாச்சார, பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளுக்கான சரியான சூழலை உருவாக்குவதன் மூலம்... Read more »