தொண்டைமானாறு கலையரசி சனசமூக நிலையத்தால் கெளரவிப்பு நிகழ்வு

வடமராட்சி தொண்டைமானாறு கலையரசி சனசமூக நிலையத்தால் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் கெளரவிப்பு நேற்று 23.03.2024 சனிக்கிழமை இடம்பெற்றது.

மாலை 06.00மணிக்கு கலையரசி சனசமூக நிலைய தலைவர் ச.தினேஷ் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பணிப்பாளர்,விளையாட்டுத் திணைக்களம்,வடமாகாணம், பா.முகுந்தன் அவர்களும்

சிறப்பு விருந்தினராக யா/வேலாயுதம் மகாவித்தியாலய ஓய்வு நிலை அதிபர் கு.ரவீந்திரன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக கிராமசேவகர்,முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கு.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்

விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபம் நோக்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானதை தொடர்ந்து மாணவர்கள் சமூக சேவகர்கள்,என பலர் கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews