தீவக கடலில் கிருமி நாசினிகள் கரை ஒதுங்குகின்றன!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சமயம் இலங்கை கடற்படையினரைக் கண்டு கடலில் வீசிய 34 மூடை கிருமி நாசினிகள் யாழ்ப்பாணம் தீவகத்தில் கரை ஒதுங்குகின்றன. தமிழ் நாட்டில் இருந்து கடந்த 27 ஆம் திகதி மீன்பிடிக்க புறப்பட்ட ஓர்  நாட்டுப் படகில் 34... Read more »

வேலணை சரவணையில் 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர்நேற்று மாலை காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு... Read more »

வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியை கடத்த முற்பட்ட குழு பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

யாழ்.வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப் பிடித்து கயெஸ் வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டையில் பஸ்சில் வந்து இறங்கிய மாணவியை கூட்டிச் செல்வதற்காக தாயார்... Read more »

வேலணை மண்கும்பானில் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் மீட்பு!

வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. மண்கும்பானில் உள்ள ஓர் வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். இதன்போது 4 மூடைகளில் சுமார் 120... Read more »

இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு வரி அதிகரிப்பு.

இலங்கையில் தொலைத்தொடர்பு வரி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அதற்கமைய குறித்த வரியானது 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் பெறுமதி சேர் வரி... Read more »

சத்தியலிங்கத்துக்கு அழைப்பானை மாவை, குலநாயகம் நீதிமன்றில் பிரசன்னம் யூன் 17 வரை இலங்கை தமிழரசுக் கட்சியிக்கு தடை…!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இணை பொருளாளரும் ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று 03.06.2022 விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தங்களது ஆட்சேபினையை மன்றுக்கு தெரிவிக்க சந்தர்ப்பத்தை வழங்கி இடைக்கால... Read more »

நெருக்கடித் தீர்வில் தமிழ்த்தரப்பு ஒரு தரப்பாக பங்குபற்ற வேண்டும்……! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச மகாநாயக்கர்களிடம் 21 வது திருத்தத்தை சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற முயற்சித்திருக்கின்றார். மகாநாயக்கர்கள் 13 வது திருத்தம் ஆபத்தானதென்றும் அது இருக்கும் வரை முப்படைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அஸ்கீரிய பீடாதிபதியும் மல்வத்தைப்பீட பீடாதிபதியுமே இதனைத் தெரிவித்திருக்கின்றனர்.... Read more »

வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் பலி……!

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் செலுத்திக் கொண்டிருந்த மாணவனிற்க்கு முன்னால்... Read more »

யாழில் நகை கடையில் நகைகளை சுருட்டிய கில்லாடி பெண்கள் கைது!

யாழில் நகைகளை சுருட்டிய கில்லாடிப் பெண்கள் அகப்பட்டனர். யாழில் உள்ள பிரபல நகை கடையில்  7 காப்புகளை ஆட்டையை போட்ட கில்லாடிப் பெண்கள் மூவரும்  வகையாக மாட்டிக்கொண்டனர். கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடையில் நேற்று முன்தினம்  சென்ற மூன்று  பெண்கள் காப்பு கொள்வனவு செய்வது... Read more »

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் 288,645 கடவுச்சீட்டுகள் விநியோகம்.

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதக் காலப்பகுதியில் 288,645 பேருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகபேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 382,506 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more »