ஜனாதிபதி ரணிலை பின் தள்ளிய மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இடம்பிடித்துள்ளார். பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின் தள்ளி அவர் முன் வந்துள்ளார். அதற்கமைய, நாட்டு மக்கள் மத்திய வங்கி ஆளுநர் மீது 56.6... Read more »

சைவ சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க கோரி ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்குமாறு சிவசேனையின் நீண்ட காலக் கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனை அமைப்பின் துணைத்தலைவர் தமிழ்திரு மாதவனால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று நேற்று(01.12.2022) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை இலங்கையின் இயற்கையோடு இணைந்த 10,000... Read more »

கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்கவும், முன்னேறவும் பாடுபடுங்கள் – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் வாழ்த்து

கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்கவும், முன்னேறவும் பாடுபடுங்கள் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் வாழ்த்தியுள்ளர். வெளியான 2021ம் ஆண்டு சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், அனைத்து தரப்புக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார். அண்மையில் வெளியான பெறுபேறு மகிழ்ச்சியளிக்கின்றது.... Read more »

யாழில் குளிக்க சென்றவருக்கு நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் ஒருவரே நீரில் மூழ்கிய நிலையில் இன்று பிரதேச மக்களினால் சடலமாக மீட்கப்பட்டார்.... Read more »

வடக்கு, கிழக்கின் பொருளாதாரத்திற்கு உதவும் புலம்பெயர் உறவுகளின் பணம்! சுமந்திரன்

நாட்டில் போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு புனர்வாழ்வின் அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு... Read more »

பருத்தித்துறையில் பயங்கரம், தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளைஞன்…!(video)

யாழ் மாவட்டம் பருத்தித்துறை துறைமுகம்  பகுதியில் ரிக் ரொக்  வீடியோ படப்பிடிப்பில் ஈடுபட்ட இளைஞன் கடலிற்க்குள் விளாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளான்.  எனினும் அவ் இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிள் கடலிற்க்குள் வீழ்ந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம்... Read more »

புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து – ரஷ்ய பெண் உட்பட இருவர் பலி!

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை ஹபராதுவ, தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில், உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்... Read more »

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் மாணவ பாராளுமன்ற முதலாவது அமர்வு

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் மாணவ பாராளுமன்ற முதலாவது அமர்வு  இன்று  வியாழக்கிழமை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மறியா தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலய சமூக விஞ்ஞான பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி. மரியநாயகம்... Read more »

கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதுவர் ஜூலி சுங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய நால்வரே அமெரிக்கத் தூதுவரோடு கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பு... Read more »

வவுனியாவில் இன்று காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம்!

வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள்... Read more »