யாழ் மாவட்டம் பருத்தித்துறை துறைமுகம் பகுதியில் ரிக் ரொக் வீடியோ படப்பிடிப்பில் ஈடுபட்ட இளைஞன் கடலிற்க்குள் விளாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளான். எனினும் அவ் இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிள் கடலிற்க்குள் வீழ்ந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
இன்று பிற்பகல் சில இளைஞர்கள் சேர்ந்து tik tok வீடியோ காட்சிகளை பதிவு செய்வதற்க்காக பருத்தித்துறை துறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாகஜம் புரிந்துள்ள நிலையில் எதிர்பாராத விதமாக குறித்த மோட்டார் சைக்கிள் கடலிற்க்குள் பாய்ந்துள்ளது. எனினும் குறித்த இளைஞன் அதிஸ்ட வசமாக எந்தவித பாதிப்பும் இன்றி தப்பியுள்ளான்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞனது மோட்டார் சைக்கிள் சுளியோடிகள் இராணுவம் கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.