நாளை பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்துள்ளார். வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுடன் பாடசாலையை திறப்பது தொடர்பில் இடம் பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்விடயம்... Read more »

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் அளவுகோல் எது? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்……!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முதல் இரு குற்றச்சாட்டுக்களான 1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்? 65;:35 என்ற ஜன பரம்பலுக்கு நியாயமே அற்ற 50:50 என்ற கோதாரி... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான முகாம்….!

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான முகாம் இன்று  இடம் பெற்றுள்ளது.. யாழ் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் புனித கப்பலேந்தி மாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடத்தியுள்ளனர். அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் கட்டைக்காடு... Read more »

பளையில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் அவசர சிகிச்சை பிரிவில்!

பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் நேற்று (10) அன்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை வண்ணாங்கேணி கிராமத்தில் நேற்றைய தினம் மாலை வேளை அதே கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளை பின்னால் வந்த குடும்பஸ்தர்... Read more »

பல்வேறு  திருட்டுக்களுடன் ன் தொடர்புடைய சந்தேக நபரகள் இருவர் தருமபுரம் பொலிசாரால் கைது…!

பல்வேறு  திருட்டுக்களுடன்  தொடர்புடைய சந்தேக நபர்கள்  இருவரை தருமபுரம் பொலிசார்  கைது செய்துள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வகையான திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் 10.12.2022 நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம்... Read more »

தாக்குதலுக்குள்ளான பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமாகிய அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த... Read more »

யாழில் திடீரென ஒன்று கூடிய முன்னாள் போராளிகள்!

இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம் எனும் தொனிப் பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்பண நிகழ்வில் சட்டத்தரணி தவராசா மற்றும்... Read more »

31ஆம் திகதியின் பின்னர் அரச துறையில் ஏற்படவுள்ள நெருக்கடி!

60 வயதை கடந்த அரச உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள போதிலும் அரச சேவைக்கு பாரிய பாதிப்பு ஏற்படாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் 31ம் திகதிக்கு பிறகு 60 வயதை எட்டிய... Read more »

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும்... Read more »

கடும் குளிரான காலநிலை வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நிலவும் கடும் குளிரான காலநிலையால், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், பல நோய்களுக்கு உள்ளாகுவதாகவும், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் குழந்தைகள் வெளியே சென்றால், நன்றாக... Read more »